பக்கம் எண் :

 

       காப்புப் பருவம்

175

இரு-இரண்டு, பைங்கோதையர்-பசிய மாலையை அணந்த பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் என்னும் இரண்டு மாதர்களை, வேட்ட-திருமணம் செய்துகொண்ட, பான்மை-முறைமை, இணங்க-பொருந்த, ஓர்-ஒப்பற்ற சிங்கடிவனப்பகை எனும் இரு பெண்கள், பயலாமல்-பெற்றெடுக்காமல், பயந்த-பெற்றெடுத்த, தொண்டர்-சுந்தரர், எழுவகையுளார்-பத்தராய்ப் பணிவார், பரமனையே பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே சேர்த்தார், திருவாரூர்ப் பிறந்தார், முப்போதும் திருமேனி தீண்டுவார், முழுநீறு பூசிய முனிவர், அப்பாலும் அடிச்சார்ந்தார், பொன்-அழகிய, ஏத்தெடுத்தல்-போற்றுதல்.

    விளக்கம் இறைவர் பிறப்பு இறப்பு அற்றவர்.  பிறவா யாக்கைப் பெரியோன் எனச் சிலம்பில் குறிக்கப்பட்டவர். “பிறப்பிலார், இறப்பிலார் பிணை ஒன்று இல்லார்,“  “ ஈறிலாத ஈசன் “  “ இறப்பொடு பிறப்பிலானை, என்று திரு முறைகளும் கூறுகின்றன.  விநாயகர் திருவரங்கத்தில் கோயில் கொண்டிருப்பதற்குரிய காரணம் இன்னது என்பதைக் காளமேகம் குறிப்பிடும்போது

    “ தந்தை பிறந்திறவாத் தன்மையான் தன்மாமன்
      வந்துபிறக்கும் வன்மையினால் முந்தொருநாள்
      வீணுக்கு வேளை எரித்தான் மகன்மாமன்
      சாணிக்கு வந்திருந்தான் காண் “ 

என்று பாடிய பாட்டும் சிவபெருமான் இறவாதவன் என்பதைக் காட்டும்.

    இதனால்தான் ஈண்டு  “ நித்தராய்”  எனப்பட்டார்.  இறைவர் என்றும் தில்லையில் நடனம் புரிபவர்.  இவர் நடனம் புரிந்திலரேல், உலகில் படைத்தல், காத்தல், அழித்தல், மறைததல், அருளல் ஆகிய ஐந்தொழில்கள் நடைபெறா :  மக்களை ஆனந்த வரநிதியில் திளைக்கச் செய்யவே இறைவர் நடனம் புரிகின்றனர்.  இதனை முறையே.