பக்கம் எண் :

மன

 

       காப்புப் பருவம்

189

மன்னிய சீர்மறை நாவன்

11. மன்னிய திருப்பாட்டில் ஆகாரம் முதலிய
       மறந்திராப் பகல்முயன்று
   வையத்து வாழ்வார்கள் நோக்காத வண்ணம்நவ
       மணிஆ லயம்புரிந்து
   மின்னிய சடைப்பரமர் பிறதளி மறுத்தடை
       விதம்கண் டுவந்தபூசல்
   வித்தகர்முன் மேயஎழு வோரும்எம் இதயத்து
       மேவவைத் தேத்தெடுப்பாம்
   பன்னியதொ கையும்வகையும் முதல்ஆத லால்முதல்
       பகர்சைவ ரேஅருளினார்
   பரவுவிரி இறுதிஆ தலின்இறுதி யார்எனப்
       படுசைவ ரேஅருளினார்
   துன்னிய பொருத்தம்இது என்றுலகம் மகிழ்தரத்
       தொண்டர்வர லாறனைத்தும்
   தூவாய் மலர்ந்தஅருள் மொழிவான வனை ஆன்ற
       தோன்றலைக் காக்கஎன்றே

    (அ. சொ) பன்னிய-சிறப்பித்துச் சொல்லிய, தொகை-என்பது சுந்தரரது திருத்தொண்டத் தொகை, வகை-நம்பி ஆண்டார் திருத்தொண்டர் திருவந்தாதி, பகர்-கூறு, பரவு-போற்றப்படும், விரி-விரிநூல், இறுதி என்பது தொகை வகை விரி என்றும் முறைவைப்பில் இறுதியாக இருப்பது, துன்னிய-நெருங்கிய, தூ-சுத்தமான, வானவன்-உயர்ந்தவன், தேவன், ஆன்ற-அறிவு, பண்பு முதலானவை நிறைந்த, தோன்றலை-மக்களுள் சிறந்த சேக்கிழாரை, மன்னிய திருப்பாட்டு என்பது திருத்தொண்டத் தொகையின் பதினோராவது பாட்டின் முதற்குறிப்பு, வையத்து-உலகில், வண்ணம்-முறையில், நவ-புதிதான, மணி-அழகிய, பரமர்-சிவபெருமான், தளி-கோவில், அடை-அடைந்த, உவந்த-