New Page 1
குரிசில்வயல் நாவலூர்
ஊரன் “ என்றும் கூறியுள்ளதையும் காணவும்.
வகைநூலைச் செய்த
நம்பியாண்டார் நம்பிகளும் ஆதி சைவ மரபினர். இதனைத் திருமுறை கண்ட புராணம் “ நாரையூரினில்
ஆதி சைவ மறையோன்பால், வையம் எலாம் ஈடேறச் சைவம்வாழ மாமணிபோல் ஒரு சிறுவன் வந்து தோன்றி “ என்று
கூறுகிறது. அச்சிறுவரே நம்பியாண்டார் நம்பிகள்.
விரிநூல் செய்த
சேக்கிழார் பெருமானார் வேளாள மரபினர். இதனைத் திருத்தொண்டர் புராண வரலாற்று நூலில்
வரும் “ அத்தகைய புகழ் வேளாண் மரபில் சேக்கிழார் குடியில் வந்த அருண்மொழித் தேவர் “
எனும் அடிகளைக் கொண்டு உணரலாம். அருண்மொழித் தேவர் என்பது சேக்கிழார்க்குப் பெற்றோர்கள்
இட்ட பெயர் ஆகும்.
மக்கள்
மரபை அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்று பிரித்துப் பேசும் வழக்கம் நம் நாட்டில் உண்டு.
இதனைத் தொல்காப்பியர், “ அந்தணர், அரசர், வணிகர் வேளாளர் “ என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த முறைவைப்பில் அந்தணர் முதலிலும், வேளாளர் இறுதியிலும் குறிக்கப்பட்டுள்ளனர். முதலில்
குறிக்கப்பட்ட அந்தணர் என்ற பகுப்பின்கீழ், தொகைநூல் செய்த சுந்தரரும், வகைநூல் செய்த நம்பிகளும்
அமைகின்றனர். இறுதியில் உள்ள வேளாளர் என்னும் பகுப்பில் சேக்கிழார் அமைகின்றனர். அந்தணர்கள்
என்று முதலில் குறிக்கப்பெறும் முறை வைப்பில் முதலில் குறிக்கப்பட்டதனால், முதல் நூல் செய்தற்கு
அவ்வந்தண மரபில் வந்த இருவர்களும் பொருத்தமானவர்களே. இறுதி நூலாகிய விரிநூல் செய்தற்கு
முறைவைப்பில் இறுதியில் வைத்துப் பேசப்பெறும் வேளாள மரபினர் பாடி இருத்தல் மிகமிகப்
பொருத்தமாகும். இந்தக் கற்பனை நயத்தினை உட்கொண்டே ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள்,
|