| 
New Page 1
 
(History of India Part 1 Page 18) 
 என்று எழுதியுள்ளார்.  இதன் பிறகே ஆரியரின் ஏனைய வேதங்கள் வந்துள்ளன. 
    மேலே கூறிய வரலாற்றுப் 
பேராசிரியரே இதற்குத் தெளிவு கூறுகின்றனர்.  சமவேதத் தோற்றத்தினைப் பற்றிக் கூறுகையில்  
 
The Samaveda is only a selections of hymns from Rigveda set to music for being 
chanted by singers trained to the task  என்று கூறுகிறார். நூலின் 25 ஆம் பக்கம் காண்க.) 
அதன் பின் அதர்வ வேதத்தைப் பற்றிக் கூறுங்கால்,  The 
Athervaveda, reckoned as pertaining to the Brahman, the priest who superintended 
the entire sacrifice is miscellaneous is charactor the most valuable for history 
and sociology after the Rigveda 
 என்றனர்.  இந்தவாறான பாகுபாட்டு முறைகளை எல்லாம் பார்க்கும்போது யஜுர் வேதத்தின் 
தோற்றமும் பிற்பட்டது என்பது புலனாகும்.  இதனால் வடமொழியில் நான்கு வேதங்கள் ஆதியில் இல்லை 
என்பதும், நான்கு வேதங்கள் என்ற பாகுபாடு பின்னால் தோன்றியது என்பதும் பெறப்படுகின்றன.  வேதங்களை 
நான்காகப் பகுத்தவர் வேத வியாசர் என்ற குறிப்பினை வில்லிபுத்தூரார் தம் பாரத நூலில், 
“தோத்திரமான தெய்வச் சுருதிகள் யாவும் நான்காக் கோத்தவன்“ என்று கூறியுள்ளதையும் காண்க.  
நச்சினார்க் கினியரும்  “ பின்னர் வேதவியாசர் சின்னான் பல்பிணிச் சிற்றறிவினோர் உணர்தற்கு 
நான்கு கூறாக இவற்றைச் செய்தார் ஆதலின் “ என்றனர். 
    ஆகவே, தொல்காப்பியர் 
குறிப்பிடும் மறை தமிழ் மறையே என்பதும், தமிழில் நான்மறை என்று கூறப்பட்டு வரும் இடங்களில் 
எல்லாம் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் பொருள் பற்றிக் கூறப்பட்டு வந்த நூற்கள் என்றும் 
கொள்ளுதல் வேண்டும்.  இந்த நான்மறைப் பொருள்களையே இறைவனார் கல்லாலவிருட்சத்தின் கீழ் 
இருந்து சனகாதி முனிவர்கட்கு உபதேசம் செய்தருளினார். இதனைத் திருவாசகம் தெள்ளத் தெளிய எடுத்து 
மொழிகிறது. 
 |