| 
ச
 
     
சடையாய் எனுமால் 
சரண்நீ எனுமால் 
    விடையாய் எனுமால் 
வெருவா விழுமால் 
    மடையார் குவளை 
மலரும் மருகல் 
    உடையாய் தகுமோ 
இவள்உள் மெலிவே 
என்று   பாடி அவ் வணிகனை 
எழுப்பியதும் ஆகும்.    ஆகவே,   அருள்   சம்பந்தர் எனப்பட்டார். 
    குன்றத்தூரும் தம்மை 
அடைந்தவருக்கு முத்தியாகிய கதியினைக் கொடுக்க வல்லது என்பதை இச் செய்யுள் அறிவித்து நிற்கிறது.                 
 
(24)  
4.     முரிவில் வயிரம் 
கால்யாத்த 
           முழுமா ளிகையால் 
கடல்கடையா 
       முன்னம் திருமால் 
உருஒத்து 
           முயங்கும் 
எனவும் அதற்கருகே 
       பிரிவில் கருநீ லங்குயிற்று 
           பெருமா ளிகையக் 
கடல்கடைந்த 
       பின்னர் அன்னான் 
உருவொத்துப் 
           பிறங்கும் 
எனவும் அதற்கருகே 
       எரிவில் விடுசெந் 
துகிர்மாடம் 
           எயில்சூழ் 
காஞ்சி அடைந்தன்னான் 
       எய்தும் உருஒத் 
தஃதென்றும் 
           எந்நா 
வலரும் கொண்டாடச் 
       சரிவில் வளம்சால் 
குன்றத்தூர்த் 
           தலைவா தாலோ 
தாலேலோ 
       சகலா கமபண் டிததெய்வச் 
           சைவ தாலோ தாலேலோ 
    
[ அ. சொ. ]  
முறிவில்-முறிக்கப்படமாட்டாத, கால்-தூண்கள், யாத்த-கட்டி அமைத்த, முயங்கும்-விளங்கும், 
பொருந்தும், நீலம்-நீலநிறக் கற்கள், குயிற்று-பதித்துள்ள காரணத்தால், அன்னான்-அத்திருமாலின், 
பிறங்கும்-விளங்கும், எரி-தீயைப்போல, வில்லிடு-ஒளிவிடும், துகிர்-பவழத் 
 |