பக்கம் எண் :

ஊக

358

       சப்பாணிப் பருவம

 

        ஊக்கம் உடையான் ஆயிடினும்
            உற்ற படையும் பலவேனும்
        ஊக்கம் அறிவன் இடத்தோடு
            முற்று வினை செய் யாவிடினே

என்று கூறுகிறது.

    காலம் அறிதலும் காவலனுக்குத் தேவையாகும் காலம் அறிதல் என்னும் தொடரை விளக்க வந்த பரிமேலழகர், “வலியான் மிகுதியுடையனாய்ப் பகைமேல் சேறலுற்ற அரசன், அச்செயலிற்கேற்ற காலத்தினை அறிதல்” என்றனர்.  மணக்குடவர் “அறிதலாவது வினை செய்தற்காம் காலம் அறிதல்” என்றனர்.

    வள்ளுவர்,

    “ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
     கருதி இடத்தால் செயின்”

    “பருவத்தோ டொட்ட ஒழுகல் திருவினைத்
     தீராமை ஆர்க்கும் கயிறு”

என்றனர்.

    “ஏற்றகாலம் வரும் அளவும் எண்ணி இருக்க” என்பதும், “போற்றி எனக்கு வென்றியுறும் பொழுது தேர்ந்தே வினை புரிக” என்பதும் வினாயக புராணம்.

        சீலம் அல்லன நீக்கிச்செம் பொன்துலைத்
        தாலம் அன்ன தனிநிலை தாங்கிய
        ஞாலம் மன்னற்கு நல்லவர் நோக்கிய
        காலம் அல்லது கண்ணும்உண் டாகுமோ

என்பர் கம்பர்.

    இவற்றையெல்லாம் ஒருங்கு சேர்த்து இங்கு, “இடம் காலம் முதல் அறிதலும்” என்றனர்.  முதல் அறிதல் என்றதனால் வலி அறிதலும் அரசனது கடமை என்பது பெற்றாம்.  அதாவது தனக்குள்ள வலியும் பிறர்க்குள்ள வலியும் அறிதல்.  செய்யத் தக்க வினையை, எண்ணினாலும் அதனைச்