அ
அவையியற்றை
உண்டாக்குதல்”
என்றனர். இக் கருத்துக்களைத் தழுவியே, “நனி வரூஉதினி ஈட்டும் மாண்பும்” என்றனர்.
வள்ளுவர்,
“இன்சொலால் ஈத்தளிக்க
வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ்
வுலகு”
என்று அரசனது ஈகைத் தன்மையைப்
புகழ்ந்தனர். பகைவரை அஞ்சாமை பார்த்திபர்க்குப் பண்பாதலின், வள்ளுவரும் வேந்தற்குரிய
இயல்புகளைக் கூறும்போது முதற்கண் அஞ்சாமையினை வைத்து,
“ அஞ்சாமை ஈகை அறிவூக்கம்
இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு
இயல்பு”
என்றார்.
வேந்தர்கள் இடம்
அறிந்து எதையும் இயற்றுதல் வேண்டும். இடம் அறிதற்கு உரை கூறவந்த பரிமேலழகர், ‘பகைமேற் செல்வான்தான்
வெல்லுதற்கு ஏற்ற நிலத்தினை அறிதல்’ என்றனர்.
இடம் அறிதலின் மேன்மையை
வள்ளுவர்,
“ எண்ணியார் எண்ணம்
இழப்பர் இடன்அறிந்து
துன்னியார்
துன்னிச் செயின்”
தொடங்கற்க எவ்வினையும்
எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல்
லது
ஆற்றாரும் ஆற்றிஅடுப
இடன் அறிந்து
போற்றார்கண்
போற்றிச் செயின்
என்றனர்.
விநாயக புராணம்
இடன் அறிதல் வேந்தன் சிறப்புக்களில் ஒன்றாம் என்பதை,
ஊக்கம் இலனா யினும்இடத்தோ
டுற்ற வினைசெய்
குவனாயின்
ஊக்கம் உடையார்க்
கிடன்இன்றாய்
ஒழியும் ஊக்கம்
இலாதவனுக்கு
|