இகர உய
இகர உயிருடன் தகர ஒற்று
ஊர்ந்த எழுத்தாகிய தி என்பதனை முதலாகக் கொண்டவர் திருநாளைப் போவார், திருக்குறிப்புத் தொண்டர்.
அகரம் ஊர்ந்த சவ்வை முதலாகக் கொண்டவர் சண்டேசுவரர். இந்த அரிய குறிப்புக்களே “குறில் நெடில்
தனித்தும் ம, ,த, சவ்வூர்ந்தும் முதல் அமையும் நாமம் உற்றார்” என்னும் அடியில் பெறப்டுதல்
காண்க,
வேதம் நான்கு.
அவை இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன. இவ்வாறு வடமொழி வேதத்தை நான்காகப் பகுத்து
ஒழுங்கு படுத்தியவர் வேதவியாசர். இதனை லில்லிபுத்தூரார் தம்பாரதத்தில் “தோத்திரமான தெய்வச்
சுருதிகள்யாவும் நான்காக் கோத்தவன்” என்று வேதவியாசரைக் குறிப்பிட்டிருத்தல் காணவும்.
ஆகவே, வியாசர் நான்காகச் செய்தற்குமுன்பு, வேதம் மூன்றாகவே கருதப்பட்டது. அதுபோது அதர்வணம்,
ஏனைய மூன்றிலும் அடங்கி இருந்தது. இக்காரணத்தால் அக்காலத்தே வேதம் த்ரயீ என்றே வழங்கப்பட்டது.
அதனை உட்கொண்டே ஈண்டு மும்மைமறை எனப்பட்டது. மும்மை உலகாவன சுவர்க்கம், மத்திமம், பாதளம்.
சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகையின் சிறப்பை மிகுதிப்படுத்த ஆசிரியர் “மும்மை மறையும்
பரவும்,”மும்மை உலகும் புகழும் மும்மையாப்பு” என்று உயர்வு நவிற்சி அணி தோன்றக் கூறினார்.
மும்மையாம்
வருணம் வைசிய மரபு, பிராம்மண, க்ஷத்திரிய, வைசிய என்ற முறைவைப்பில் வைசிய மரபு மூன்றாவதாக
வருதலின், ‘ மும்மையாம் வருணம்’ என்றனர். வணிகர்கள் இயல்பு இன்னது என்பதைப் பட்டினப்
பாலை,
வடுவஞ்சி
வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்ப நாடிக்
கொள்வதூஉமிகை
கொளாஅது கொடுப்பதூஉம்
குறைகொடாஅது
பல்பண்டம் பகர்ந்துவீசும்”
எனப் போற்றுகிறது.
|