என
என்று தாமே எடுத்து
மொழிதல் காண்க. இறைவன் திருவாய் மலர்ந்ததனால் “ உலகெலாம் “ எனும் தொடர் மறை ஆயிற்று.
இறைவர் உயிர்களுக்கருளும் இயல்பு அனந்தம். அவர் அவர்களின் தகுதிக்கேற்ப அருள்பவர்.
இதனைத்தான் திருஞான சம்பந்தர் “ ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம் ஆதிமாண்பும் கேட்பான்புகில்
அளவிலை “ என்று அருளிப் போந்தார்.
ஆசிரியர் திரு
பிள்ளை அவர்கள் “ வினை உருபு தொக “ என்னும் தொடரில் அரிய பொருள் நுட்பத்தினைப் புலப்படுத்தி
யுள்ளனர். அதாவது,
உலகெ லாம்உணர்ந்
தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி
வேணியன்
அலகில் சோதியன்
அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி
வாழ்த்தி வணங்குவாம்
என்னும் திருத்தொண்டர்
புராணப் பாடலின் ஈற்றடியில் உள்ள “ மலர்சி லம்படி “ என்னும் சீர்களுக்கு உண்மைப் பொருள்
இதுதான் ; வேறன்று, என்னும் அரிய குறிப்பை உணர வைத்துள்ளார். மலர் சிலம்படி என்பதன்
பொருள், உலகெலாம் மலரும், மலர்கின்ற மலர்ந்த சிலம் பணிந்த திருவடி என்பதாம். அவ்வாறின்றி “
மலர் போன்ற சிலம்பினை அணிந்த திருவடி “ என்று உவமத்தொகையாகப் பொருள் கூறுதல் தவறாகும்.
இப்பொருள் தருவதாயின் “ மலர்ச்சிலம்படி “ என்று சகர ஒற்று மிகுந்திருக்கும். ஆனால்,
மலர் சிலம்படி என ஒற்று மிகாது, வினைத் தொகை இலக்கணப்படி இத் தொடர் அமைந்துள்ளது. இவற்றைச்
சீரிய முறையில் “ வினை உருபு தொக “ என்று பாடியருளினர். வினை என்றது ஈண்டு வினைத் தொகையைக்
குறிக்கும். உருபு தொகுத்தலாவது இடையே முக்காலம் மறைந்திருத்தல் ஆகும். வினைத் தொகை இலக்கணம்
கூற வந்த தொல் காப்பியர், “ வினையின் தொகுதி காலத் தியலும் “ என்றார். இதற்கு
விளக்கம் தந்த நச்சினார்க் கினியர், “ வினைச் சொல்லினது ஈறாய்த் தொக்கு நிற்கும்
எழுத்துக்கள், காலத்
|