பக்கம் எண் :

கள

 

       வாரானைப் பருவம்

513

களால் தெளியலாம்.  தாம் அம்மையப்பர் கொடுத்த பாலையுண்டதை அவரே.

போதையார் பொற்கிண்ணத்து அடிசில் பொல்லா தெனத்
தாதையார் முனிவுறத் தான்எனை ஆண்டவன்
காதையார் குழலினன் கமுமல வளநகர்ப்
பேதையாள் அவளொடு பெருந்தகை இருந்ததே

என்று பாடியுள்ளார்.

    “வாசி தீரவே காசு நல்குவீர்” என்று குழந்தை கேட்பது போலக் காசு கேட்டதனாலும், அத்தர் பியல்மீது (தோள் மீது) இருந்துதாம் பாடினார் என்பதை அவரே “அத்தர்பியல் மேல் இருந்து இன்இசையால் உரைத்தபனுவல்” என்று பாடியிருப்பதாலும், இவர் குழந்தை நிலையில் இருந்து சத்புத்திர மார்க்கத்தை விளக்கிப் பேறுபெற்றனர் என்பதைத் தெளியலாம்.

    சுந்தரர் சகமார்க்கமாம் தோழமை மார்க்கத்தை விளக்க வந்தவர் என்பதை அவர் வாக்கைக் கொண்டே நிறுவலாம். ஆரூரர், திருவாரூர் இறைவனைப்பற்றிக் குறிப்பிடுகையில்,

“ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்”

என்று பாடிக் குறிப்பிட்டுள்ளனர்.

    இறைவர் சுந்தரரைத் தோழராகவே கொண்டார் என்பதைச் சேக்கிழார்,

        வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
            மன்னவன் ஆரரு ளால்ஓர் வாக்குத்
        தோழமை ஆக உனக்குநம்மைத் தந்தனம்
            நாம்முன்பு தொண்டு கொண்ட
        வேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்என்றும்
            புனைந்துநின் வேட்கை தீர
        வாழிமண் மேல்விளை யாடுவாய்என் ரூரூரர்
            கேட்க எழுந்த தன்றே