பக்கம் எண் :

இதன

518

             வாரானைப் பருவம்

    இதனால்தான் ஆசிரியர் “ஆதரிக்கும் குணம் தழுவும் சேவையார் குலம்” என்றனர்.  இதனைக் காஞ்சிப் புராணம் அழகுற.

        முருகுயத் தலர்ந்த மலரவன்தனாது
            முகமுதல் உறுப்பெலாம் தாங்கிச்
        சரணமென் றுரைக்கும் உறுப்பினில் தோன்றிச்
            சாற்றும்அம் முகமுதல் உறுப்பின்
        வருஒரு மூவர் தங்களை உழவின்
            வண்மையான் நிலைபெறத் தாங்கும்
        உரியவே ளாண்மை பூண்டபேர் தனக்கே
            உடையவர் இடம்பல அவண

என்று கூறிவதைக் காண்க. 

(56)

6.     நலத்தின் உயரும் பழையனூர்
           நாளும் பொலியும் அவையகத்து
       நலிவு புரிநீ லியைக்கண்டு
           நடுங்கா நின்ற வணிகனுக்கு
       நிலத்தில் இயல்நின் உயிர்க்கிறுதி
           நேரு மாயி னியாமெல்லாம்
       நெருப்பில் முழுகி உயிர்துறப்போம்
           நீஓ ருதிஎன் றுரைத்தபடி
       வலத்தின் உயரச் சொல்தவறா
           வண்ணம் எழுநாக் குழிமுழுகி
       வடஆ ரணியத் தாடொருவர்
           மலர்த்தாள் அடைந்த எழுபதின்மர்
       குலத்தில் உதித்தார் அருள்மழைபெய்
           கொண்டல் வருக வருகவே
       குன்றைப் பொருமா ளிகைக்குன்றைக்
           கோமான் வருக வருகவே.

    (அ. சொ.) பழையனூர் என்பது திருவாலங்காட்டிற்குக் கிழக்கே ஒரு கல் தொலைவில் உள்ள ஓர் ஊர்.  பொலியும்-