New Page 1
வெதிர்ஏய் கரத்துமென்தோல்
ஏய்சு வல்வெள்ளை
நூலில்கொண்மூ
அதிர்ஏய்மறையின்
இவ்வாறு செல்வீர்
என்று குறிப்பிடுதல் காண்க.
இவர்கட்கு
முக்கோல் தண்டு உண்டு என்பது,
நூலே கரகம்
முக்கோல் மணையே
ஆயும் காலை அந்தணர்க்
குரிய
என்று தொல்காப்பியம்
கூறுவதனால் அறியலாம்.
இதற்கு இலக்கியமாக,
எறித்தரு கதிர்தாங்கி
ஏந்திய குடைநீழல்
உறித்தாழ்ந்த
கரகமும்
உரைசான்ற
முக்கோலும்
நெறிப்படச்
சுவல்அசைஇ
வேறோரா நெஞ்சத்துக்
குறிப்பேவ ல் செயல்மாலைக்
கொளைநடை அந்தணீர்
என்ற கலித்தொகை
அடிகளை எடுத்துக் காட்டலாம்.
வணிகர்களின் பண்பு
இத்தகையது என்பதைப் பட்டினப் பாலை குறிப்பிடுகையில்,
நெடுநுகத்துப் பகல்போல
நடுவுகின்ற நல்நெஞ்சினோர்
வடுவஞ்சி
வாய்மொழிந்து
தமவும் பிறவும் ஒப்பநாடி
கொள்வதூஉம் மிகைபடாது
கொடுப்பதூஉம் குறைபடாது
பலபண்டம் பகர்ந்து
வீசும்
இயல்பினர் என்கிறது.
வள்ளுவரும் இவர்கள் இயல்பை, “வாணிகம் செய்வார்க்கு வாணிகம் போணிப் பிறவும் தம் போல் செயின்”
என்றனர்.
|