7
7. செறிதமிழ்ச் சங்கத்து
முதன்மையோன் அன்பின்ஐந்
திணையென நவின்றநூலின்
செப்பிய விதிப்படி கரிகுழைத்
தெழுதுகண்
செய்யவாய் வெண்நகைநலார்
முறிவற வணங்குதோ
றெருவிடுத லால்வளரும்
மொய்ம்பு பெற்றனைஎநாளும்
மொய்த்தஎரு விடுதல்அத
னால்வளர்தல் உழவுதொழில்
முயல்இவன் காட்டுதொழிலே
மறிவரிவ இந்நன்றி உள்உணர்ந்
தனைஎன்னில்
வாராதிருப்பை
கொல்லோ
மதியோன் எனும்பெயர்
குறிப்புறா மல்கவிக
மகன்வாதி வாக்கிஆய
அறிவர்கழ கம்பரவு
குன்றைநகர் ஆளியுடன்
அம்புலீ ஆடவாவே
அருளுருத் தேசுபொலி
அருள்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே
[அ. சொ.]
செறி-நிறைந்த, அடைந்த, முதன்மையோன் - முழுமுதற் பரமனாகிய இறைவன், அன்பின் ஐந்திணை-இறையனார்
அகப்பொருளாகிய ஐந்திணை இலக்கணம், நவின்ற-சிறப்பித்து ஓதப்பட்ட, செப்பிய-கூறிய,
முறிவு-மனவருத்தம், நகை-பற்களையுடைய, நலார்-நல்ல மாதர், மொய்ம்பு-பலம், எநாளும்-எந்த நாளும்,
மொய்த்த - நெருங்க, மறிவரிய - மறித்துஅறிதற்கரிய பிரதி செய்யல் ஆற்றாத, மறிவு-திரும்புதல்,
உள்-உள்ளத்துள்ளே, இருப்பைகொல்லோ-இருப்பாயோ, குறிப்புறாமல்- தனக்குப் பெயராக வைத்துக்
கொள்ளாமல், குறி-பெயர், கவி-ஆசு, மதுரம், சித்திரம், வித்தாரம் என்னும் நால்வகையில் கவி
பாட வல்லோன், கமகன்-அரிய பொருளையும் செம்பொருள் நடையில் காட்டிப் பாடுபவன், வாதி-காரணத்துடனும்,
மேற்கோளுடனும் எடுத்துக் காட்டி அளவை நூல் வழிப்படி பிறன் கொள்கையினை மறுத்துத் தன் கொள்
|