சந
சந்திரன் தன் ஒளியால்
பைங் கூழ்களை வளர்த்தல், தனுள்- தன்னுள் பிறங்கு-விளங்கு பேணும்-மதிக்கும், பாராட்டும், திருநாவலூர்-சுந்தரர்,
சீகாழியார்-சீர்காழிப்பதியில் அவதரித்த திருஞானசம்பந்தர் செயிர்-குற்றம், கூன்-வளைவு,
கூன்-செய்யுள் உறுப்புக்களில் ஒன்று, ஒரு-ஒப்பற்ற நாவல்-பொன், (அதாவது சம்புநதம்) என்னும்
பொன், பொலத்தினும்-பொன்னைவிட, நவில்-சொல் மதி-மதித்துக்கொள், போற்று, பரவு-போற்றும்,
நாவலோர்-நாவன்மையால் பேசும் திறமுடைய சொற் பொழிவாளர்கள்.
விளக்கம் : நாவலோ
என்பது, நெல்போர் தெழிக்கும் எருதுகளைத் துரப்பதற்கு உழவர் செய்யும் ஓசை. இதனை முத்தொள்ளாயிரம்
“காவல் உழவர் கடுங்களத்துப்
போர்ஏறி
நாவலோஓ என்றிசைக்கும்
நாள்ஓதை-காவலன்
கொல்யானை மேலிருந்து
கூற்றிசைத்தால் போலுமே
கல்யானைக்
கோக்கிள்ளி நாடு”
இவ் ஓசை நீங்காத
மருதவிடம் என்றதனால் நெல்வளம் இனிது புலப்படும். சந்திரனது ஒளி பயிர் வளர்ச்சிக்கு
மிகவும் தேவைப்படுவதாகும். அதனால்தான் “பயிர் செடி கொடியெலாம் கருக்கொள்ள நீ உபகரித்த”
என்றனர். சேக்கிழார் செய்ந்நன்றி அறியும் பண்பினர் என்பதைச் சந்திரன் பயிர்கள் வளரத்
தன் ஒளியினைப் பரப்பினைக்கு நன்றி செலுத்தி அதனைப் பாராட்டுபவர் ஆதலை “பேணாதிருந்தான்
அலன்” என்றனர்.
திருநாவலூர் என்பார்
சுந்தரர். சுந்தரர் திருநாவலூரில் பிறந்தமையின் இப்பெயர்க்கு உரியர் ஆயினர். இவரது பெற்றோர்
பதி “திருமறையவர்கள் நீடும் திருநாவலூராம் அன்றே? என்பதால் அறிகிறோம். இவரது பெற்றோர்
இவர்க்கு இட்ட பெயர் “நம்பி ஆருரர் என்றே நாமமும் சாத்தி” என்பதனால் உணரலாம். என்றாலும்
சுந்தரர் தம் திருப்பெயரைத் திருநாவலூரர் என்றும் தமது பதிகங்களின் ஈற்றுப்பாடலில் குறிப்பிட்டுள்ளனர்.
“நல்லவர் தாம்பரவும்
|