பக்கம் எண் :

8

8.    சிற்றில் பருவம

1.     வாரும் திருவீ தியின்ஒருசார்
           வண்ணித்த திலங்கள் கொடுமுயன்றில்
       வகுக்கும் திறத்தே அறிவுசெலும்
           மாண்பால் நினது வரவுணரா
       தாரும் இருக்கை எழாதிருந்தோம்
           அறிந்து தருக்கி இருந்திலமால்
       அண்ணல் அஃதுள் கொண்டுபகை
           அமையப் பாராட் டுதல்அழகோ
       ஓரும் புகழ்க்கற் பகத்தளிகள்
           ஒருங்கு மொய்ப்ப தெவன்என்றே
       உம்பர் நடுங்கி நிலைகுலைய
           ஒருவேற் றுமையும் உணர்வரிதாச்
       சேரும் பொழில்தண் டகநாடா
           சிறியேம் சிற்றில் சிதையேலே
       செல்வம் செருக்கு குன்றையருள்
           செல்வா சிற்றில் சிதையேலே

    [அ. சொ.] ஓரும்-ஆராயும், அளிகள்-வண்டுகள், எவன்-என்னே, உம்பர்-தேவர்கள், பொழில்-சோலை,  உம்பர்-மேல் இடம்,  தண்டக  நாடா-தொண்டை  நாடனே,  வாரும்-நீண்டிருக்கும், திரு-அழகிய, சாரி-பக்கம், வண்ணித்திலங்கள்-வளமான முத்துக்கள், கொடு-கொண்டு, மாண்பால்-மாட்சிமையால், ஆரும்-யாரும், இருக்கை-இருப்பிடத்தைவிட்டு, அண்ணல்-பெருமையில் சிறந்தோனே, அமைய-பொருந்த, திறம்-செயல், செருக்குதல்-மயங்குதல்.

    விளக்கம் : சிற்றில் சிதைத்தலாவது பெண்கள் மணலாலும், சிறுகற்களாலும் வீதியில் சிறுவீடு கட்டி விளையாடும்