| 
வ
 
வாது செய்து மயங்கு 
மனத்தராய் 
ஏதுசொல்லுவீர் ஆகிலும் 
ஏழைகாள் 
யாதோர் தேவர்எனப் 
படுவார்க் கெல்லாம் 
மாதே வன்அலால் தேவர்மற் 
றில்லையே 
கூவ லாமை குரைகடல் 
ஆமையைக்   
கூவலோ டொக்கு மோகடல் 
என்றல்போல் 
பாவ காரிகள் 
பார்ப்பரி தென்பரால்  
தேவர் தேவன் சிவன்பெருந் 
தன்மையே 
எரிபெ ருக்குவர் அவ்எரி 
ஈசன 
துருவ ருக்க மதாவ துணர்கிலார் 
அரிஅ யற்கரி யானைஅ 
யர்த்துப்போய் 
நரிவி ருத்தம தாகுவர் 
நாடரே 
அருக்கன் பாதம் வணங்குவர் 
அந்தியில் 
அருக்கன் ஆவான் அரன்உரு 
அல்லனோ 
இருக்க நான்மறை 
ஈசனை யேதொழும் 
கருத்தி னைநினைப் 
பார்கன் மனவரே 
தாயின் நல்ல சங்கர 
னுக்கன்பர் 
ஆய உள்ளத் தமுதருந் 
தப்பெறார் 
பேயர் பேய்முலை உண்டுயிர் 
போக்கிய 
மாயன் மாயத்துப் பட்ட 
மனத்தரே 
என்பன. 
 
    ஆகவேதான், சிறுமையர்கள் 
உண்மை உணர்ந்து “அப்படி மூவருள் ஒருவனெனப் பரமனைக் கூறின் அடைவது அடையும் என நன்கு தெரிந்தேம்’ 
என்றனர்.  அடைவது அடைதலாவது நரகமாகும்.  ஈண்டு மூவருள் ஒருவன் அல்லன் இறைவன்.  அவன், “நாதம் 
அகன்ற பரமன்” என்பதை நன்கு உணர்த்தினர் திரு.பிள்ளை அவர்கள்.  நாதம் என்பது நாத தத்துவம்.  
அகன்ற என்பது  அதற்கும்  அப்பாற்பட்ட  என்பதாம்.   பரமன்  துரிய சிவமாகும். “வேதம் கடந்த விமலன்” 
என்று கச்சியப்பரும் தெரிந்து கூறினர்.  இத்தகைய இறைவன் மூவருள் ஒருவன் என்பது சிவ நிந்தையாகும்.  
நரகத்தையும் அடைவிக்கும். 
 |