பக்கம் எண் :

9

 

       சிற்றில் பருவம்

649

9.      மாறு படுமன் னவர்எனினும்
            வளவன் கழல்கால் தொழின்அவர்வாழ்
        மணிமா ளிகைகள் மிக்குயரு
            மாறு விடுப்பாய் மறையோர்முன்
        கூறு படுநம் பரன்அடியார்
            குறிப்புள் உணர்ந்து நெடுவானும்
        குறுக நிமிர்மா டங்கள்பல
            குயிற்றிக் கொடுத்துக் குடிஅமைப்பாய்
        வேறு படுமா றியாம்வகுத்த
            வீட்டை விடுத்துச் செலின்வரல்என்
        வேழக் கரும்பின் சாறோடி
            விரிந்த கரம்பும் பாய்ந்துகுழை
        சேறு படுதண் டகநாடா
            சிறியேம் சிற்றில் சிதையேலே
        செல்வம் செருக்க குன்றைஅருள்
            செல்வா சிற்றில் சிதையேலே

    [அ. சொ.] வேழக்  கரும்பு-வேழமாகிய கரும்பு,   கரம்பு-கரம்பு நிலம், விளைவு செய்யாத நிலம், குழை-குழைந்து, வளவன்-சோழன், கழல்கால்-வீரத் தண்டை அணிந்த பாதங்கள், மணி-அழகிய, மறையோர்-வேதங்களை ஓதும் பிராம்மணர், குயிற்றி-அமைத்து, வரல்-வருதல், மாறுபடும்-பகைமை கொண்ட, முன்கூறுபடுதல்-முதன்மை யானவராய்க் கூறப்படும், குறிப்பு-மனக் கருத்து, என்-உனக்கு வரும் நஷ்டம் என்ன?

    விளக்கம் :  அரசர்கள் தம்மைத் தொழுது வழிபடும் பகை மன்னர்களுக்குத் தண்டனை நீக்கி அருளுவர் என்பது “வந்தடி பொருந்தி முந்தை நிற்பின், தண்டமும் தணிதி  நீ” என்று புறநானூறு கூறுதலால் அறிகிறோம்.  இதுபோன்ற கருத்தே முதற்கண் காணப்படுவது.  சேக்கிழார் தலைமை அமைச்சராய் இருந்தமையின், பகை மன்னர்களும் உயர்ந்த