பக்கம் எண் :

என

 

       சிறுபறைப் பருவம்

719

என்று பரஞ்சோதியார் அறைகூவி இப்பாடலைப்  பாடி  அமைத்திருப்பது,  தமிழ் அருள் முங்கு தமிழ் என்ற காரணத்தால்தான்.

“பாலைநெய்தல் பாடியதும் பாம்பொழியப் பாடியதும்
 காலனைஅன் றேவிக் காரம்கொண்ட-பாலன்
 மரணம் தவிர்த்ததுஷம் மற்றவர்க்கு நந்தம்
 கரணம்போல் அல்லாமை காண்”

என்று திருக்களிற்றுப் பாடியார் கூறுவதன் குறிப்பும்,

    அணங்கமர் யாழ்முரித் தாண்பனை
        பெண்பனை ஆக்கிஅமண்
    கணங்கழு ஏற்றிக் கடுவிடம்
        தீர்த்துக் கதவடைத்துப்
    பிணங்கலை நீர்எதிர் ஓடம்
        செலுத்தின வெண்பிறையோ
    டிணங்கிய மாடச் சிரபுரத்
        தான்தன் இருந்தமிழே

என்று நம்பியாண்டார் நம்பிகள் பாடியதன் குறிப்பும் தமிழ் அருள் முங்கு தமிழ் என்ற     கருத்தில் என்க.

    வானும் புகழ்புகலி மன்னன் தொடர்பொன்று
    தேனுந் தீதழியோன் சீர்ஏடு-தானும்
    கரியாய் மொழியும் கரியாய் விடாமல்
    எரியார் அழல்வீழ்ந் தெழுந்து

என்று சிவப்பிரகாச சுவாமிகள் கூறியுள்ளதன் குறிப்பும், தமிழ் “அருள் முங்கு தமிழ்” என்பதை விளக்கவே என்க                          

(91)