பக்கம் எண் :

794

             சிறுதேர்ப் பருவம்

    விளக்கம்:   நின்சரித்திரம் என்றது திருத்தொண்டர் புராண வரலாறு என்னும் சேக்கிழாரைப் பற்றிய புராணமாகும்.  இதனைப் பாடியவர் உமாபதி சிவாசாரியார், இவர் தில்லைவாழ் அந்தணமரபினர்; சைவ சித்தாந்த சாத்திர நூல்கள் பலவற்றைப் பாடியவர்; மேலும், இவர் திருக்கயிலாய பரம்பரையினைச் சார்ந்தவர்; மெய்கண்ட சந்தானாசாரியாகளுள் ஒருவர்.  இத்தகைய பெருமை சான்ற பெரியார் வேளாள குல திலகராம் சேக்கிழாரது வரலாற்றைப் பாடியுள்ளனர்.  இதனையே, “பண்புகெழு நின் சரித்திரம் இனிய பாவால் பரப்பிய திருக்கைலாய பரம்பரை உமாபதி சிவம்” என்றனர்.  திருக்கயிலாய பரம்பரையின் விளக்கம் முன்பே விளக்கப்பட்டது. முன்னோர் ஆவார் மெய்கண்டதேவர், அருண்நந்திசிவாசாரியார், மறை ஞான சம்பந்தர் ஆவார்.  இவர்கள் புறச்சந்தான முன்னோர்.  அகச்சந்தான முன்னோர்கள், நந்தியம் பெருமான் சனற்குமாரர், சத்தியஞான தரிசினிகள், பரஞ்சோதியார் ஆவார்.

    இவ்விரு சந்தான வழிவந்த நண்பு புனைத்தவர்கள் அருள் நமச்சிவாய, சிவப்பிரகாசர், ஸ்ரீ பஞ்சாட்சா தேசிகர்.  ஸ்ரீ பஞ்சாட்சரத் தேசிகரே நமச்சிவாயமூர்த்திகள்.  இவர்களே திருவாவடுதுறை ஆதீனத்தை நிலைநிறுத்தியவர்கள்.  இதனை தட்ணாமூர்த்தி தேசிகர் திருவாக்கான,

திருந்துவட கயிலைதனில் பரமசிவன் அளித்த
    சிவஞான போதமுணர் நந்திமுதல் சிறந்தே
வழங்குரவர் வெண்ணெய்நல்லூர் மெய்கண்ட தேவன்
    வழங்கருட்சந் ததியின்நாமச் சிவாயதே சிகனாம்
இருங்குரவன் அளித்தசிவப் பிரகாச தேசன்
    இயங்குமறை வனத்தருகோர் வனக்குகையில்
                                    உறைநாள்
பொருந்தியவன் திருவடிக்கீழ் அவன் அருளே வலினால்
போந்தருளா வடுதுறைவாழ் நமச்சிவா யனைப்புகழ்
                                        வாம்

என்ற பாடலால் உணரலாம்.