ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-ஜம்பை.
பல்லவி.
நீசனாய்ப் பிறந்தாலும்
போதும்-ஐயா
நீசனாய்ப் பிறந்தாலும் போதும்
(நீச)
அனுபல்லவி.
ஆசையுடனம்பலவனடியி லிருந்தேத்தும்
(நீச)
சரணங்கள்.
கோதிலாத்துவங்கள்புரிந்தாலும்
தங்கள்
குலவண்மைதவறாதநெறியிலிருந் தாலும்
வேதமுடியாவுமுணர்ந் தாலும்-மாயை
விலகாதுஒருநாளுந் தொலையாதுதுன்பம்
(நீச)
களவுகொலைசெய்துவந்
தாலும்-பழி
காரருடன்எந்நேரங்கூடியிருந் தாலும்
வளமறவேவாழ்வுகெட் டாலும்-நல்ல
மனிதனவனிடமாகமறலியணு காது (நீச)
ஏத்தகருமங்கள்செய் தாலும்-எங்கும்
கிடையாதகொடையாளியெனவிருந் தாலும்
கோத்திரக்கீர்த்திமிகுந் தாலும்-எங்கள்
கோபாலகிருஷ்ணன்தொழும் பாதம்நினைந்தேத்தும்
(நீச)
வசனம்.
இப்படியே பக்திசெய்தால்
போதும், மற்ற ஜாதி வருணாசிரமங்களினாலே ஒன்றும்
பிரயோஜனமில்லையென்று கூறி உபமன்யர்
ஓர் இதிகாசத்தைச் சொல்லுகின்றார்:
“பூர்வத்திலே,
தில்லை வெட்டியானென்றும், பெற்றான் சாம்ப
|