ராகம்-மோகனம்; தாளம்-சாபு.
பல்லவி.
அடடாநந்தனேதில்லைக்-கனுப்புமென்றெனைக்கேட்ப
தாச்சரியம்மிக வாச்சர்யம்.
அனுபல்லவி.
அடடாகட்டுக்கதைக
ளனைத்துமிங் குதவாது
நடடாவயலைத்தேடி நடவுநட
விப்போது. (அட)
சரணங்கள்.
ஈனசாதியிற்பிறந்தோ
னுனக்கவ்விடத்தி
லென்னஅலுவ லுண்டு-அல்லவென்று
போனபோதிலும்மூவா யிரவரிருக்கும்வீதி
புகுந்துநீகடந்து கொண்டு
மானுமழுவுஞ்சிர மாலையணிந்த வுரு
மாற்றலர்திரிபுர மதனையெரித்த
பெரு
மானுக்கியலுந்திரு மஞ்சனோற்சவந் திரு
வாதிரைப்பலன்பெற மாட்டாய்சொற்படி
யிரு. (அடடா)
வேள்விகளொருபுறம்வேதியர்க
ளியற்றும்
மேன்கள்மிகத் தங்கும்-அந்தத்
தாழ்மையிலாத்திவ்யத்தலம்போய் வருவதற்குந்
தடையில்லையெனப் பொங்கும்
தன்மையிதெல்லாங் கனவாகமுடிய
வரும்
சாதியிழிவையோ சித்தாலேதெரிய
வரும்
பன்னிப்பன்னிப்படித்தேன் பாவ மற்றாயெ வரும்
பட்டால்தெரியும்பறைய னுக்கென்பது
போல்வரும். (அடடா)
|