திருநாளைப்போவார்101நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அல்லும்பகலுஞ்சோ றளித்துக்காத்திடுந்தெய்வ
    மானவம்பல வாணன்-இங்கிருக்க
தொல்லைப்படவோவேண்டா மென்றுரைத்திடுவேன்
    சொல்லமறந்தநீ வீணன்
தில்லுமுல்லுமுள்ள பேச்சேதுக்கடா பிடித்
    திருக்குமெனதுபிடிதிரும்பாதடா பகடி
பல்லையொடித்து விடுகிறேன் பாரடா தகடி
    பஞ்சைப்பயலேசமர்த்துப் பார்ப்பேனெடடா தடி. (அடடா)

____________

வசனம்.

வேதியர் சொல்லிய சொற்களைக்கேட்ட நந்தனார் நீங்க ளென்னைத்
தடியாலடித்தாலும் பிராணனை மடித்தாலும் கழுத்தை யொடித்தாலும் சிதம்பரத்தில்
நடித்தானைக் காணாமலிருக்கேனென்று கடுத்துச் சொல்லும்போது, வேதியர் துடித்துச்
சொல்லுவார்.

ராகம்-ஸு ரடி; தாளம்-ஆதி.

பல்லவி.

இனியுன்குற்றத்தைப் பொறுப்பேனோ-அணுவள
வேனுஞ்சம்மதிப்பேனோ.

அனுபல்லவி.

தனியாம்வேதசாஸ்திரந் தனையுணர்ந்தாலுஞ் சாதி
தன்புத்திபோகாதென்ற சரித்ரம்பொய்யல்ல நீதி (இனி)

சரணங்கள்.

பலகாலமும்பழமும் பாலூட்டினாலும் பாம்பு
     பழகாததற்குவொப்பாய்ப் பகரலாகுமே தீம்பு