திருநாளைப்போவார்105நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தேள்போலே கொட்டி, இவரொரு ஆள்போலே நின்றார். நந்தனார் நாள்போகுதே
யென்றார்.

வசனம்.

நந்தனார் வேதியரைப்பார்த்து நீங்களென்னை அடிக்கலாம் நானும் அடிபடலாம்,
தங்களுக்குக் கைநோகுமே யென்று வணங்கிச் சொல்லுகின்றார்.

ராகம்-பேஹாக்; தாளம்-ஆதி.

பல்லவி.

அடித்ததுபோதுமையே-என்னை-அடித்ததுபோதுமையே.

சரணங்கள்.

அடித்தாலும்உங்கள் கைவலி           யாதோ
   அடிமைவேலைசெய்யும் என்னுடன் வாதோ
படித்ததெல்லாம் என்மனத்திற்         படாதோ
   பாவியெனக்கும் இனிமேல்தெரி    யாதோ (அடித்)

நல்லவரேயுங்கள் மனத்தின்பிர       காரம்
   நடக்காமலிருந்ததுமேஅப         சாரம்
சொல்லத்தெரியுமோ வெனக்குப      சாரம்
   சுகிர்தசாலியுங்க ளாலேயிந்       நேரம் (அடித்)

____________

வசனம்.

நந்தனார் ஐயருக்குத் தலைவணங்கிச் சொல்லுவார்.