கண்ணிகள்.
ராகம்-மோஹனம்; தாளம்-த்ரிச்ர
ஏகம்.
இலவுகாத்தகிள்ளை
யாச்சே - நான்
எடுத்துச்சொன்னதெல்லாம்
போச்சே
பறையன்சொல்லுபழு
தாச்சே - நீங்கள்
பார்ப்பாரென்பதுமே
லாச்சே
ஏழைச்சொல்லம்பல
மாச்சே - தெய்வ
மில்லாமலெங்கையோ
போச்சே
சேரியேசொர்க்கமென்
றாச்சே
- தில்லைச்
சிதம்பரமென்பது
போச்சே
விழலுக்கிறைத்தாற்போ
லாச்சே - எந்தன்
வேண்டுதல்வீணாகிப்
போச்சே
கண்டதைக்கண்டிட
லாச்சே - நல்ல
காலம்பிறக்காமற்
போச்சே.
__________
வசனம்.
நந்தனார் பெரியோர்கள் கோபத்தை
இனி எளியேன் தாங்கே னென்று சொல்லுவார்.
லாவணி.
ராகம்-ஜஞ்ஜு டி; தாளம்-ஆதி.
பெரியோர்சினமடையா ரடைந்தாற்
பெருங்கடல்தீயாதே
பேயன்தாங்குவேனோ இம்மாத்திரம் பிழைபொறுத்தாளுமையே
அல்லும்பகலும் நானறிந்ததுமேதோ வறியாமல்போனேன்
ஆசைகொண்டேன்திரு வம்பலத்தெய்வம் மோசஞ்செய்யுதையே
|