திருநாளைப்போவார்108நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கண்ணிகள்,

ராகம்-சௌராஷ்ட்ரம் ; தாளம்-ஆதி.

பல்லவி.

ஐயாவுன்னடைக்கலம் பொய்யாகும்தேகமிதை
மெய்யாக்கிவிடமனம் நையாதிருப்பதேன். (ஐயா)

அத்தானான்வருவேனோ அம்பலத்தைப்பெறுவேனோ
சற்றாகிலுங்காண்பேனோ சந்நிதியில்தொழுவேனோ (ஐயா)

__________

விருத்தம்.

தாறி லாதவிப் பிறவியைத் தானெடுத் தஞ்சி
தூறு பட்டனற் கீழ்க்குல மாகியித் துன்பம்
நீறு பட்டிடு மல்லவோ தில்லையி னின்றால்
பேறு பெற்றிடு வேனதற்கும்மொரு பிசகோ.

கண்ணிகள்.

ராகம்-எதுகுலகாம்போதி; தாளம்-சாபு.

பல்லவி.

ஐயோதெய்வமே யிந்த வையர்க்கடிமையானேன்
      செய்யாவினை செய்தல்லவோ
உள்ளங்கரைந்துருகி யுய்யும்படிகேட்கில்
      கல்லுங்கரையு மல்லவோ
ஆலைக்கரும்பதுபோ லாச்சுதங்கமுழுதும்
      வேலைக்கிடமு மில்லையே
பாவியெனக்கோவந்த பார்ப்பான்மனதிரங்கான்
      ஆவிதவிக்குதல்லவோ