திருநாளைப்போவார்109நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

கோவில்கும்பத்தைக்கண்டால் கோடிவினைகள்தீரும்
      பாவிக்குக்கிடையாதுகாண்
தில்லையம்பலவாண தெய்வம்புலையர்க்காக்
      கல்லாச்சமையலாச்சுதே
பொன்னம்பலவாவுன்னைப் போற்றும்வகையில்லாமல்
     இன்னம்பிறவியேறுமோ
அன்னை தந்தையும்நீயென் னாவிபொருளும்நீயுன்
     சந்நிதிவரச்செய்வாயே.

_________

விருத்தம்.

அடிமுடி யொன்று மில்லா வம்பலத் தரசே யுன்பால்
கொடியனான் வந்தா லென்ன குறையுமோ வதனால் நீதி
நடலைசெய் பார்ப்பான் கையில் நடுங்கவோ விடுத்தா யென்றும்
படிமிசை வீழ்ந்தா னாடிப் பதறுவான் கதறுவானே.

லாவணி.

ராகம்-நவரோஜ்; தாளம்-ஆதி.

பல்லவி.

செய்யுமுபாயமறியே னறியேன்

அனுபல்லவி.

அரகரசிவனே தில்லைச்சிவனே.

சரணங்கள்.

பத்துவருட காலமாகவந்து பார்ப்பானைக்கேட்டேன்
சித்தமிரங்கிப் போய்வாவென்றொருநல்ல சேதிசொல்லக்காணேன் ஐயோ (செய்யு)