திருநாளைப்போவார்111நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

நந்தனார், தில்லைத்தலத்தைக் காணாத சென்ம மிருந்தா லென்ன போனாலென்ன
வென்று நிச்சயம்பண்ணி மனதுருகி வாடும்வேளையில், கொஞ்சம் நித்திரைபோற்கண்டு
அந்நித்திரையில் அம்பலத்தேவன் வந்துசொல்லுவார்.

ராகம்-காம்போதி;தாளம்-ஆதி.

பல்லவி.

கனவினில் கண்டாரே-நந்தனார்-கனவினில் கண்டாரே.

அநுபல்லவி.

மனதிலெப்போதும்   வருந்தியடிபணியுங்
கனகசபேசனைக்     கண்ணினாற்காணாமல் (கனவி)

சரணங்கள்.

நீநடுங்கழனிகள் நானடச்சொன்னேன்
ஊனமில்லாமலுன் னுடையவன்களிக்க
மானிடப்பிறவியி லுனக்கிணையார்பத்தி
மானில்லையெனத்தில்லை நாதன்வந்துரைக்கவே (கனவி)

கங்குல்பகலாய்மனம் களித்துஉள்ளன்பதனால்
சங்கரனேயென்று சாரும்நிலையதனால்
அங்கம்புளகிதமாய் ஆனந்தித்தேனதனால்
இங்கேவந்தேனென்று யீசனும்புகல. (கனவி)

__________