திருநாளைப்போவார்113நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

விருத்தம்.

அய்யரே வாருமென்று அழைத்திடும் நந்தனாரைத்
துய்யவே தியருங்கண்டு தொல்புவித் தெய்வமெல்லாம்
பொய்யது வென்றுதள்ளிப் புலையனும் வந்தானென்று
செய்யவேண் டியதுசெய்யச் செப்புவா னொப்புவானே.

வேதியர் சொல்லுதல்.

ராகமாலிகை-வராளி; தாளம்-ஆதி.

பல்லவி.

நந்தாவுனக் கிந்தமதி வந்த தென்ன தந்த தாரடா

அநுபல்லவி.

அந்தரங்கஞ் சொந்தமா யிருந்தது மறந்து போய்
விந்தையாய்நினைந்தன்றோ அந்தவேளை புத்தியில்லை- (நந்தா)

சரணங்கள்.

தோடி.

கொல்லைக்காட்டு நரிபோலே பல்லைக்காட்டிப் பேசுவாய்
கல்லைக்காட்டிக் கோபங்கொண்டு சொல்லைக்காட்டி யேசுவேன்
தில்லையென்று சொன்னதெல்லா மில்லையென்று போச்சுதா
கல்லேயென்று ஐயர்சொன்ன சொல்லேநிச மாச்சுதா
      சித்தமுந் தெளிந்துதா உற்றது வுணர்ந்துதா
      பத்தியுந் தொலைந்துதா கத்தலும் பறந்ததா
சட்டம்-சட்டம்-நல்லது-நல்லது மெத்த-மெத்த-சந்தோஷம்- (நந்தா)

மத்யமாவதி.

இப்படிஅப்படி சொல்லாதே   தப்பெடுத் தடிப்பையா
சொற்படி யொப்புதலாக       மெய்ப்படிநடப்பையா