திருநாளைப்போவார்12நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம்-சங்கராபரணம்;தாளம்-ஆதி.

பல்லவி.

நந்தன் சரித்ரமானந்தம்-ஆனாலுமத்தி
யந்தம் பக்திரச கந்தஞ்-சொல்லச்சொல்ல (நந்தன்)

அனுபல்லவி.

நந்தன் சரித்திரம்வெகு அந்தம்-சிவனாருக்குச்
சொந்தம் தொலையும் பவபந்தம்-கேட்டபேர்க்கு (நந்தன்)

சரணங்கள்.

ஏது யிவனைப்போலே சாது-பூமியிலிருக்
காது அரிது இரு காது-படைத்தபேர்க்கு (நந்தன்)

வாடி மனதிளகிப் பாடி-ஹரஹராவென்
றாடி கனகசபை நாடிச் -சேருவேனென்ற (நந்தன்)

அண்டர் கொண்டாடுஞ் சோழ-மண்டலந்தன்னைச்சூழ்ந்து
கொண்ட மேற்காநாட்டில் விண்ட-ஆதனூரில்வாழ் (நந்தன்)

ராகம்-கமாசு; தாளம் - ஆதி.

பல்லவி.

திருநாளைப்போவான்-சரித்திரம்
தேனிலும்பாலினு மினியதுகண்டீர் (திருநா)

அனுபல்லவி.

சித்தமுருகிய சிவயோகிகளுக்
கர்த்தமிதுவென்றே யனுதினம்பணிந்திடும் (திருநா)

சரணங்கள்.

மேதினிபுகழுமாதனூர்விளங்கும்-மாதவம்புரிந்தே சாதனைபெருகிய
பேதமிலாதவன்-வேதப்பொருளைவிரைந்
தோதும்கருணைகுரு-நாதனைப்பணிந்திடும் (திருநா)