திருநாளைப்போவார்120நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

உருவமனதறிய வொருவனாலாகாதென் றுலகம்மொழியாதோ-அது
திறமாச்சுதினியுந்தன் ஜன்மசபலமாச்சு தெய்வமுமிரங்காதோ
ஜாதியிலிழிகுலஞ் சாஸ்திரங்கிடையாது சந்தேகப்படலானேன்-இப்போ
ஆதிசிதம்பர ரகசியம்பாரென்று யனுப்பிவிடலானேன்.

_________

வசனம்.

இப்படி வேதியர் மிகவும் பரவசமடைந்து நடந்த வரலாற்றைக் கேட்க,
நாளைப்போவார் கனவிலே ஈசன் வந்து கருணை செய்தா ரென்றார். அதற்கு வேதியர்
சொல்லுகின்றார்.

ராகம்-யமுனாகல்யாணி ; தாளம்-ஆதி.

பல்லவி.

நந்தா வுன்கனவினி லெப்படிவந்தார்
வரந்தந்தாரெந்தாய். (நந்தா)

சரணங்கள்.

சந்ததமும்சன காதிமுனிவர்தொழுஞ்
சச்சிதானந்த மூர்த்தியல்லவோ (நந்தா)

ஆதிமுடிவுகிடை யாதபராபரஞ்
சோதியலவோநீச சாதியென்றறிந்தும் (நந்தா)

அண்டரண்டநிறை கின்றசபாபதிக்
கொன்றும்பேதமில்லை யென்றுதெளிந்தே. (நந்தா)

____________

வசனம்.

வேதியர் தான் செய்த பிழையெல்லாம் பொறுத்துக் கொள்ளுவீரென்று சொல்வதும்,
நந்தனார் மறு உத்தரங் கூறுவதும்.