தண்டகம்.
ராகம்-எதுகுலகாம்போதி ; தாளம்-ஆதி.
வேதியர் - ஏழைப்பார்ப்பான்
செய்திடும்பிழையை
யேற்றுக்கொள்ளாதே
நான்
இனமறியாதவன் பின்புத்திக்கார
னென்பதுவும் பொய்யோ.
நந்தனார் - பொய்யாகியவிந்த
வுலகத்தைப்பார்க்கும்
புண்ணியவானே நான்
புலையனுங்க
ளடிமையல்லவோ
புத்தி சொல்லுமையே.
வேதியர் - புத்தியுண்டு வித்தையுண்டு
பக்தி
கிடையாது வாயால்
புலம்பினதாலென்ன மனமடங்காது
போதங் கிடையாது.
நந்தனார் - கிடைக்குஞ்சிதம்பர
தரிசனமென்று
கிருபை
செய்யு மையே
கீழ்க்குலமல்லவோ நாயினுங்கடையேன்
கீர்த்தி செய்விப்பீரே.
__________
வசனம்.
பரமபக்தனாகிய நீ
எனக்கு
அடிமைவேலை செய்பவன் போல் வந்தபடியினாலே
என் பிறவிப்பிணி யொழிந்ததென்று வேதியர்
சொல்லுகின்றார்.
|