அறுசீர்க்கழி நெடிலடியாசிரி
விருத்தம்.
அவப்பொழுது போனதன்றி
மறைமுடிவை
யுளங்கனிய வறிவி லுன்னித்
தவப்பொழுதுங் கணப்பொழுதுங் கண்டறியாப்
பாவியெனைச் சார்ந்தா
ரன்றோ
சிவக்கொழுந்தி னடிமையென்று பெயரிட்டு
வேலைகளைச் செய்த தாகப்
பவக்கடலைக் குளப்படிபோல் தாண்டிவரச்
செய்ததுன்றன் பக்தி தானே.
ஆனந்தக்களிப்பு.
ராகம்- நாதநாமக்ரியை ; தாளம்-
மிச்ர ஏகம்.
நந்தா நீசிவ
பத்தன்-உன்னை
நம்பாமலேமோச மானேனான் பித்தன்
(நந்தா)
பூமிக்குள் நீயொரு
சித்தன்-இந்தப்
பூமிக்குநானொரு சாஸ்திரப்ர
சித்தன்
காமிக்குள்ளே வெகு
மத்தன்-உன்னைக்
கண்டுதரிசித்தோ ரனைவரு
முத்தன்
(நந்தா)
படித்துமென்ன வெங்கள்
வேதம்-அதில்
பார்த்ததில்லையிந்தபகவனற்
கீதம்
எடுத்துச்சொன்னாய் சிவ
போதம்-அது
ஏற்காமற்போச்சுது யென்பிடி
வாதம் (நந்தா)
தெவிட்டாத சோகமப்
பாநீ-உன்றன்
தேகமுழுதிலுஞ் சிவன்றிரு
மேனி
பகையாகிய வொரு
கூனி-போலே
பழுத்தேனானாலுநீயே யாத்ம
ஞானி (நந்தா)
|