திருநாளைப்போவார்124நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

மேவுங்கீரைத்தண்டு மேருவைத்           தாங்குமா
     வீசுங்கதிர்முன்மின் னாம்பூச்சி       யோங்குமா
ஆவதழிவதெல்லா மையன்             றன்னாலே
     ஆச்சுதென்றாலென்ன வாச்சுது      யென்னாலே (ஐயா)

முன்னமேசெய்தவினை யின்வ          சத்தாலே
     மூடப்புலையனாய் மேவி          யதனாலே
இன்னல்படுவதுட னின்னமும்           வேண்டாம்
     ஏந்திக்கொள்ளுமென் றெனைக்கெடுக்கவேண்டாம். (ஐயா)

_________

வசனம்.

நந்தனார், தனது ஆண்டையாகிய வேதியரைப்பார்த்து தங்களுடைய திருவாக்கினால்
என்னையு மிப்படிப் புகழலாமோ வென்று மிகவும் வணக்கமாய்ச் சொல்லுகின்றார்.

ராகம்-ஹமீர்கல்யாணி ; தாளம்-ரூபகம்.

பல்லவி.

சின்னசாதியல்லவோ சிதம்பரம்போய் வருகிறேனான் (சி)
அன்னை தந்தையொருவரில்லை யடைக்கலமென்னையாளவேணும் (சி)
ஈரமில்லாதநெஞ்சமாகி யிறைச்சிதின்றுவுடல்பெருத்த (சி)
அல்லும்பகலுமதுவையுண்டு யறிவுமயங்கியாட்டங்கொள்ளும் (சி)

வசனம்.

இப்படிச்சொல்லிய நந்தனாரைப்பார்த்து வேதியர் சொல்லுகின்றார்.

ராகம்-தேவமனோஹரி ; தாளம்-ஆதி.

பல்லவி.

ஆருக்குத்தான்தெரியும்    அவர்மகிமை
அம்பலநாடக             மாடியபெருமை.