திருநாளைப்போவார்129நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

அண்டரண்ட கோடியெல்லா மொன்றாய்ச் சமைந்திருக்கு
மல்லவோ-பறையன்சொல்லவோ-அங்கேசெல்லவோ-நேரமாகுதல்லவோ.(ஐயே)

கலிவிருத்தம்.

வான மேவிய வும்பர்கள் வாழ்த்திய மறையைக்
கான மேசெயும் வேதிய ரேயுமக் கடிமை
யீன மாமிழி குலத்தினி லெய்திய நந்தன்
ஞான வாரிகொண் டேயவ ரருளுற நினைந்தார்.

___________

வசனம்.

இப்படி நந்தனார் சொல்ல, வேதியர் கேட்டுத் திவ்விய ஞானமடைந்து
நந்தனாரைப்பார்த்துச் சொல்லுகின்றார்.

ராகம்-சாம ; தாளம்-ஆதி.

பல்லவி.

சிதம்பரம்போய்நீர் வாருமையா நான்
செய்ததெல்லாமப சாரமையா (சிதம்பரம்)

அநுபல்லவி.

சிதம்பரம்போவீர் பதம்பெறுவீர் வேறே
சிந்தனைவேண்டாம் நந்தனேயினிமேல் (சிதம்பரம்)

சரணங்கள்.

எத்திசையிலுமுமக் கிணைசொல்லப் போமோ
பத்தியேமுதலென்று பழகியபெரியவர்
சித்தமுந்தெளிந்தது தெய்வமேநீரென்று
புத்தியும்வந்தது சத்தியமல்லவோ. (சிதம்பரம்)