இதுவுமது.
சாத்திரக் குப்பையெல்லாந் தள்ளினேன்
பதறுபோலே
காத்திரஞ் சுத்தமாச்சு கனிந்திடு முள்ளம்பக்தி
மாத்திர மிருந்தாற்போது மற்றொன்று மில்லைசைவ
க்ஷேத்திர முழுதுஞ்சுற்றிச்
சேருவேன் றில்லையென்றார்.
ராகம்-சௌராஷ்ட்ரம் ; தாளம்-ஆதி.
பல்லவி.
எந்தநேரமும் நந்தனை
சிந்தித்தா
னந்தமாகி யிருந்தன ரந்தணர். (எந்தநே)
சரணம்.
பந்தந்தீரவே யிந்தவுருவாகி
வந்துதோ வரந்தந்துதோசிவனென்று. (எந்தநே)
___________
வசனம்.
விட்டுதோ இந்தவீட்டுக்
கவலைகள் பட்டதோ பவசாகரச் சேறழித்திட்டதோ
முத்திவெள்ளம் கரைபுரண்டதோ வென்று ஏங்கித்
தொழுது எந்நேரமும் வேதியர்
இப்படியே சிவபக்தி பண்ணிக்கொண்டு ஆனந்தமடைந்திருந்தார்.
இப்படியிருக்க, நந்தனார்
ஆதனூரைவிட்டுச் சிதம்பரத்தை நோக்கி
வருகின்றார்.
ராகம்-லாவணி ; தாளம்-ஆதி.
பல்லவி.
நந்தன் சிதம்பரம்
வருகின்றார்.
|