அரகரசாம்ப சதாசிவனேபொன்
லம்பலத்தாடிய
தேசிகனே
ஐயேயுன்னடிமை-மனது-நையேனுன்னுடைமை. (நந்த)
செழித்துவியனுல கெட்டிச்சிகரங்க
ளைந்துந்தெரியுது
காணையே
தில்லைத்தலமென்பார்-அன்புடன்-சொல்லப்பலமென்பார்.
(நந்த)
குதிப்பாரொருதரங்
களிப்பார்கண்ணீ
ருதிர்ப்பாரானந்த லாகிரியால்
கொண்டானடிப்பாரே-குரவை-நன்றாய்ப்படிப்பாரே
(நந்த)
பாரளந்தகோ பாலகிருஷ்ணன்துதி
பாடுந்திருவடி
பணிவேனோ
பரகதியடைவேனோ-பூமியில்-மறுபடிவருவேனோ. (நந்த)
_________
வசனம்.
நந்தனார் ஆதனூரைவிட்டுக்
கொள்ளிடத்தருகில் வரும் போது
சொல்லுகின்றார்.
கோலாட்டமெட்டு.
ராகம் - முகாரி ; தாளம் - ஆதி.
பல்லவி.
கொள்ளிடக்கரைபோனான் -
நந்தன்
கோபுரங்களைக்கண்டான்.
அனுபல்லவி.
பள்ளச்சாதியிலும்
பறைச்சாதிநானென்று
உள்ளமுருகியவன்
வெள்ளங்கரைபுரள, (கொள்)
|