திருநாளைப்போவார்134நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

சரணங்கள்.

ஓடத்தின்மேலேறி-நந்தன்ஓங்குமகிழ்ச்சிமீறி
நாடவெவரும்நல்ல நடனக்கூத்தாடியே
நண்புடன்கதிபெற லாமென்றுறுதிகொண்டு. (கொள்)

அக்கரைபோனானே-நந்தன்-ஆனந்தங்கொண்டானே
சிக்கெனவேசிவசிதம்பரேசனைக்காணச்
சிந்தைமகிழ்ந்துசிவத் தியானஞ்செய்துகொண்டு (கொள்)

திருவாதிரைத்திருநாள்-செய்யுந்-தினமல்லவோயிந்நாள்
திருநடராஜமூர்த்தி திருமுகந்தனைக்கண்டு
சித்தங்களிப்பேனா னென்றுறுதிகொண்டு (கொள்)

_________

வசனம்.

‘நந்தனார்’ இந்தப்பிரகாரம் தோத்திரஞ்செய்துகொண்டு கொள்ளிடக்கரையைத்
தாண்டி வரும்போது தில்லைக்கோபுரத்தைக் கண்டு தரிசனம்பண்ணுவார்.

தண்டகம்.

ராகம் - தன்யாஸி ; தாளம் - ஆதி.

பல்லவி.

கோபுரதரிசனமே-எந்தன்-பாபவிமோசனமே.

சரணங்கள்.

தாபங்கள்மூன்றுந் தணிந்துவிடும்நல்ல
சோபனமுண்டாஞ் சோதிவிளங்கிய. (கோபுர)

விண்ணணைந்துமே லோங்கியேகண்டுநற்
கண்ணுளார்க்கெல்லாங் காட்சியளித்திடும். (கோபுர)