அல்லும்பகலும் அமரர்துதித்திடும்
தில்லைக்கிறையோன் றினமுமகிழ்ந்திடும்.
(கோபுர)
__________
வசனம்.
நந்தனார், தில்லைத்தலம் இப்படியிருக்கிறதென்று
சொல்லுகின்றார்.
ராகம் - நவரோஸ் ; தாளம் - ஆதி.
பல்லவி.
மாங்குயில்கூவியசோலைகளும் வாவிகூபதடாகங்களுந்
தூங்கதிர்மண்டலமெத்தையுஞ்சொர்னசபேசன்த்வஜமரமும்
நாலுபுறத்திலுங்கோபுரமும் நவமணிச்சித்திரமண்டபமும்
சீலமுறுந்திருவீதிகளுந் தில்லைவேதியர்மாளிகையும்
கண்டேன்கலிதீர்ந்தேன் என் கவலையெல்லாமொழிந்தேன்
மண்டலம்புகழுஞ்சபேசன்சந்நிதி வாழ்த்திப்பணிந்துநின்றேன்
தஞ்சமென்றடைந்தே னிந்தச் சடலத்தால்நொந்தேனினியென்னை
அஞ்சவேண்டாமென்
றொருதரஞ்சொல்லி யழைத்தாலாகாதோ
அப்பாவுன்சரணந் தில்லைக்கரசேயுன்சரணம்
ஒப்பாரில்லாநாடகம்பயிலு மொளியேநின்சரணம்.
கோபுரதெரிசனமென்கிற கீர்த்தனமுதற்கொண்டு
சிதம்பரவிலாசமெனப்படும்.
சிந்து.
சிவன்- வேடிக்கைதானென்று நாடிக்கொண்டே,
அறியாது போலிருந்த - செம்பொன்
- னம்பலத்தாடியைக் கும்பிடவே, ஆதனூர் தனிலிருந்து - விடும் -
அம்புபோ லப்புறந்
|