திருநாளைப்போவார்136நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

தையமின்றித், தில்லையருகில் வந்தார்-மனந்-தேறிக்கொண்டார் குறையாறிக்கொண்டார்,
கெண்டாமணியோசை.

திருநாளைப்போவார் புராணம்.

விருத்தம்.

நாளைப்போ வேனென்று நாங்கள்செலத் தரியாது
பூளைப்பூ வாம்பிறவிப் பிணிப்பொழியப் போவாராய்ப்
பாளைப்பூங் கமுகுடுத்த பழம்பதியி னின்றும்போய்
வாளைப்போத்தெழும்பழனஞ் சூழ்தில்லை மருங்கணைந்தார்.

_________

வசனம்.

இது-பொழிப்புரை.

நாளைப்போவேனென்றுசொல்லி அனேகநாள் கழியச் சபாநாதரைத்
தரிசனம்பண்ணவேண்டுமென்னும் பேராசையை அடக்கக்கூடாதவராய்ப்
பூளைப்பூவையொத்த நிலையாமையையுடைய பிறப்புக்களால் உண்டாகிய சம்பந்தம்
நீங்கும்பொருட்டுப் போகின்றவராய்ப் பாளையையுடைய பொலிவாகிய கமுகமரங்கள்
சூழ்ந்திருக்கும் பழைமையுற்ற தம்முடைய ஊரினின்றும் புறப்பட்டு, ஆண்வாளைமீனானது
எழும்பி விளையாடும் வயல்களையுடைய சிதம்பரத்தின் எல்லையை அடைந்தார்.

ராகம் - கரகரப்ரியை ; தாளம் - சாபு.

பல்லவி.

கெண்டா மணியாடுது-கண்டு பிணிவாடுது.