ஐம்புலன்களை மறந்தார் - பர மானந்தக்கடலுறைந்தார்
தன்தேவபாவ மறந்தார் - தில்லைச்
சிவனேயென்றிருந்தார்
ராகம் - ப்யாக் ; தாளம் - ஆதி.
பல்லவி.
இதுதானோ தில்லைத்தலம்-இத்தனைநாளுமறியேன்
இதுதானோ தில்லைத்தலம்.
சரணங்கள்.
அதுவோ யிதுவோவென் றலைந்திடும்
பேயனைக்
கதிதரு வேனென்று கைகாட்டி யழைத்திடும்
(இது)
காசினி யிலிதைக் கயிலையென்
றெல்லோரும்
பேசக்கேட்டதேயன்றிப் பேணிப்பார்த்
தறிந்திலேன். (இது)
ராகம் - அசாவேரி ; தாளம் - ஆதி.
பல்லவி.
ஆடியபாதத்தைத் தாரும் -
உம்மைத்
தேடிவந்தேன் இதோ-பாரும் பாரும் (ஆடிய)
அநுபல்லவி.
நாடிப்புகழ்ந்துதொழும் சிவ காமிமனோகரரே
தில்லை
நடராஜரே யுமது பதம்நான் விடமாட்டேன். (ஆடிய)
சரணங்கள்.
பாத்திரமல்லவோ
பாலகிருஷ்ணன்பணி-பரனேசிதம்பர
க்ஷேத்திரதரிசனம் வீடுசேர்க்குமென் றறியேனோ-அணு
மாத்திரப்பொழுதும்மை மறக்கவென் மனதுவராதென்று-மருவி
தோத்திரம்பண்ணமாட்டேன்
சுவாமி அதிலென்னசுகம் அம்பலந்தனில் (ஆடிய)
|