சரணங்கள்.
கங்குகரையேது பவக்
கரைதாண்டவேயுனது
சிவ
கங்கைதனில்மூழ்கி பவக் கடலுங்குளப்படியாகவே.
(திரு)
அல்லும்பகலுனது சபை
அருகில்நின்றுகூத்தாடினால்
கல்லாமனமுருகும் பர கதியுங்கைவசமாகுமே. (திரு)
ஆலந்தனைக்கண்டோடி
வமரர்துயர்கெடக்காத்தவன்
பாலகிருஷ்ணன்பணியுந் திருப் பாதங்கனகசபாபதியே.
(திரு)
__________
அறுசீரடி யாசிரிய விருத்தம்.
தில்லையைக் கண்ட போதே தெளிந்ததென்
னுள்ள மெல்லாம்
பல்லூழி காலஞ் செய்த பாழ்வினை தொலைந்து போச்சு
நல்லருள் நடனங் காட்டும் நாயனார்
சிற்ச பைக்குள்
செல்லுவார் மகிமை செப்பச் சேடனா
லாகா தன்றே.
___________
வசனம்.
இப்படித் தில்லையைக் கொண்டாடி
இதைப் பாராதவரே பாவி யென்பார்.
ராகம் - நவரோஸ் ; தாளம் -
சாபு.
பல்லவி.
மார்கழிமாதத்தி லாதிரைநாளையில்
வந்துசிதம்பர தேசிகனை
பாராதபாவிகட் கேதுமில்லையிந்தப்
பாரில்வந்து பிறவாதவரே
வாளிற்றொடுந்திரு மாளிகைமண்டப மாமதிலுந்தில்லை
மாநகரம்
காணக்கிடைக்கா தப்பா யிந்தபாக்கியங்
காதில்கேட்டவண்ணங் கண்டதுவே
|