ஆதிபராபர மாகியதில்லைப்பொன்
னம்பலவன்வளர் சந்நிதியில்
நாதமுங்கீதமுங் கேட்குதுவானந்த நாடகவேளையை
நானறியேன்.
__________
வசனம்.
நந்தனார் சிதம்பரங் காணாததாற்
சிவலோகங் காணேனென்பார்.
கண்ணிகள்.
ராகம் - ஸாவேரி ; தாளம் -
ரூபகம்.
சிதம்பரம்வந்து தரிசியாத ஜன்மம்
வீணென்றுபேசி
மனதிலெண்ணினார் பாத கமலத்யானம்
பண்ணினார்
பறையனுக்குமிந்தத்தலத்தைப் பார்த்தபின்புமோட்சபதவி
பலித்ததல்லவோ பாவிசெனனம் அலுத்ததல்லவோ
தொண்டுகொண்ட தங்களையர்
பெருமையெல்லாஞ்சொல்லிச் சொல்லித்
துள்ளித்தாவினார்
ஞானவிரையை அள்ளித்தூவினார்
பூதத்தினிலிதுவே தெய்வமென் றாநந்தக்கடலில்
பொங்கிப்பாடினார் புண்யத்தல மென்று தேடினார்.
தண்டகம்.
ராகம் - நவரோஸ் ; தாளம் -
மிச்ரஏகம்.
அரகரசங்கர வண்ணலேயம்பலத்தரனே
நானுந்த னடைக்கலமென்று
உருகித் துதியாரோ - ஆனந்தம்
பெருகிப் பதியாரோ
முக்தியளிக்குந்திரு மூலத்தானரைக்கண்டு
பக்திபண்ணாதவன் பாமரனல்லவோ
|