திருநாளைப்போவார்144நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

முப்பாழுந்தாண்டி மூலத்தீமூட்டிக்கொண்
டப்பாலேநின்றா லானந்தங்காணலாம்

ஒப்பா ரில்லையடா - ஊடுருவி
நிற்பா ரில்லையடா

ஆலமிடறடக்கி யம்பலக் கூத்தன்கோ
பாலகிருஷ்ணன்தொழும் பரமசிவனேயென்று

பாடிப் படியாரோ - பருவத்தில்
தேடிப் பிடியாரோ.

_________

வசனம்

நந்தனார் சிவபக்திபண்ணாதவனை நிந்தனைசெய்து இன்னமுஞ் சொல்லுகின்றார்.

கண்ணிகள்

ராகம் - ஸு ரடி  ;  தாளம் - சாபு.

வானோர் புகழ்தில்லை வனநாதர்வாழும்
ஞானசபையைப்போற்றி நமச்சிவாய-வென்று
       சொல்லாதவன் கல்வி கல்லாதவன் வெகு-பொல்லாதவன்
காசினிபுகழ்சிவ காமவல்லியைக்கண்டு
பாசமகலும்நெறி பாராதவன்-சுத்தப்
       பதராச்சு ஆட்டினதராச்சு க்ருமிக்கெதிராச்சு
ஆட்டுக்காலைச்சற்றே கேட்டுவாங்கியுள்ளே
நாட்டிக்கொள்ளாதவன் மாட்டுக்குவமை-யென்று
       நாடாரே கண்டுகூடாரே என்றுந்-தேடாரே.
அம்பலவாணனா ரருகில் வந்துகையால்
கும்பிட்டிறைஞ்சாத குருடர்களுக்குத்-திற
      மதியேது பரகதியேது பண்ணும்-விதியேது.