நாக்கிருந்துஞ்சிவ
நாமத்தைநவிலாமல்
சாக்குப்போக்குப்பேசுஞ் சண்டியவனைக்-கால
னடியானோ கட்டிப்பிடியானோ
கையா-லிடியானோ.
வேதாந்தநூற்களை
விவரித்துணர்ந்தாலும்
ஏகாந்தபத்தியொன் றில்லாதவன்-உள்ளம்
உருகாது கள்ளங்கருகாது
வெள்ளம்-பெருகாது
ஆத்திமதியஞ்சடை
யழகனாடியகூத்தைப்
பார்த்துக்களிக்காத பாவிமனிதர்க்
கொன்றும்
பலியாது வினை சலியாது சீலம்
பொலியாது (வானோர்)
பாலகிருஷ்ணன்தேடும்
பாதரசத்தைக்கண்டு
சீலமுடனேயுண்டு ஜபிக்காதவன் துன்பம்
தொலையாது இன்பம் நிலையாது
கன்மம் கலையாது (வா)
_________
வசனம்.
நந்தனார், சிதம்பரம்
பாராத கண்படைத்தாரை முகத்தைக் கெடுக்கவந்த
புண்படைத்தவரென்று
சொல்லுவார்.
ராகம் - நாதநாமக்ரியை ;
தாளம் - சாபு.
காணாதகண்ணென்ன கண்ணோ
வீணானகண்மயில் கண்ணதுபுண்ணோ
(காணாத)
சொல்லும்பொருளிறந்த
துரியவடிவமாகி
யல்லும்பகலுமற்ற
வானந்தப்பேரொளி (காணாத)
பசியாமருந்தளிக்கும்
பரமரகசியத்தி
லசையாமலேயாடு மம்பலநாதனைக் (காணாத)
|