திருநாளைப்போவார்149நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

இதுவுமது.

ராகம் - சௌராஷ்ட்ரம்  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

கொண்டானடித்தாரே-நந்தனார் கோவிலைக்கண்டு தாவித்தாவிக் (கொ)

அநுபல்லவி.

அண்டாமகிழ்ச்சியாலே-அரனேயென்றுமென்மேலே (கொண்)

சரணங்கள்.

பண்டுநான்செய்ததே          யோகம் - அதனாலுருக்
கொண்டுவந்தேன்மானிட      தேகம் - ஆகவேயிந்தப்
புண்டரீகப்பதவை            போகம் - கண்டேனென்போல
மண்ணிலெவர்க்குண்டு        யோகம் - என்றுதுதித்துக்
கொண்டாடுமிவர்புகழைக்
கூறுவதுவேயுற்              சாகம் (கொண்)

வஞ்சகமனத்தையொரு       மித்து - நினைத்தொழாத
பஞ்சமாபாதகப்பேரெ         டுத்து - உலுத்தர்களைக்
கெஞ்சியேயவர்களைய      டுத்து - உழலாமலே
கஞ்சமலர்ப்பதங்கொ         டுத்து - ஆண்டருளென்று
வஞ்சிசிவகாமிதொழும்
மணவாளனைத் துதித்துக் (கொண்)

ஒருநாற்புறமதில்            சொலிக்க - ஊரெல்லைசுற்றி
வருவார்திரும்புவார்        களிக்க - சிரசின்மேலே
இருகைகுவித்துவாழ்        வளிக்க - வேண்டுவாரிந்தக்
திருநாளைப்போவார்தான்மிகுக்க - ஆகையாலிந்தப்
பெருவாழ்வடைவாரிவர்
பேதமில்லை               யுரைக்கக் (கொண்)