திருநாளைப்போவார்150நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

வசனம்.

இப்படி நந்தனார் வீதியைச்சுற்றிச் சந்நிதிமுன் வந்து தண்டாகாரமாய் விழுந்து
பணிந்து புழுதிபடப் புரண்டு ஆனந்தமடைந்து நிருத்தசபை தெரிந்து தரிசனம்பண்ணுவார்.

ராகம் - ஸ்ரீராகம்  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

சபாதரிசனங்கண்டான்-நந்தனுஞ்-சுபாவமுடனேநின்றான்.

அனுபல்லவி.

சபாதெரிசனங்கண்டான்-அகணித
ப்ரபாவமாகிய சபாபதியிருக்கும் (சபா)

சரணங்கள்.

சதாகாலமும்வே தங்கள்மொழிந்திடுஞ்
சிதாகாரமாய்ச் செழித்துவளர்ந்திடும் (சபா)

தில்லைமூவாயிர முனிவர்கள்கூடும்
அல்லும்பகலு மவரவர்நாடும் (சபா)

__________

வசனம்.

நந்தனார், தெற்குக் கோபுரவாயிலினின்று சபாபதியை நோக்கித் துதிபண்ணுவார்.

ராகம் - ஜிங்ல  ;  தாளம் - ஆதி.

பல்லவி.

ஜயஜகதீசா-அதி சுந்தரகுஞ்சிபாதா-ஓ-ஜயஜகதீசா.