சரணங்கள்.
ஆதரவாகப் பதஞ்சலிமாமுனிக் கானந்தநாடாக
மாடுந்திருவடி (தா)
ஆகமவேதபு ராணங்களோதிய
யோகிகளாலே தேடுந்திருவடி (தா)
சிந்தைமகிழ்ந்து
குவிந்திடவேயதி சுந்தரரஞ்சித குஞ்சிதபாதம்
(தா)
பாரளந்திடுங்கோ
பாலகிருஷ்ணன்துதி பாடிப்பரவிப்
பணியும்பாதம் (தா)
ராகம்- ரீதிகௌள ; தாளம்
- ஜம்பை.
பல்லவி.
தாண்டவதரிசனந்தாரும்-தாமதம்பண்ண
வேண்டாம்-இதுசமயம். (தாண்)
அனுபல்லவி.
ஆண்டவனேயுன்பெருமையை
யாரறிந்துரைசெய்வார்
நம்பியிருக்கிறேன்பேதை யெந்தனுக்கொருதரம்
(தாண்)
சரணங்கள்.
ஆசைவலைக்குள்தங்கிப்பொங்கி
மயங்கித்தடுமாறிமும்மதங்கள் மீறி
யானெனதென்றுரைக்கும் பாசமகலநெறிநிறுத்திட
மாயவன்கோபாலகிருஷ்ணன் பணிந்திடும்உன்திருவடி
தாரிதகுகுஜெம் தரிதகணந்தரி திரிகுதிரிகுதீம்தீம்
தக்கிடத்தக தோமென்றாடிய (தாண்ட)
__________
வசனம்.
நந்தனார், பிறவிப்பிணிக்கஞ்சித்
துதிபண்ணுவார்.
|