திருநாளைப்போவார்154நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

லாவணி.

ராகம் - குரஞ்சி  ;  தாளம்- ஆதி.

அம்பலவாணாவுன்னைச் சரணமடைந்தேனானேழை
ஆதரித்தாளுவதுன்பாரமல்லவோ சொல்லவோ
எடுத்திடுஞ்சனனங் கணக்கெழுதத்தொலையாதென்பாடு
இன்னமும்பிறந்திடுவேனோநடேசனே யீசனே
ஆசையெனும்பெருங்காட்டிலே யரற்றும்முழுமூடன்
அகலவிடாதேயும்நம்பினேனுன்னை யையனே மெய்யனே
பாரளந்தகோபாலகிருஷ்ணன் தினம்பணியுமலர்ப்பாதம்
பாவியென்னுள்ளுறவேகருணை பாருமே வாருமே.

__________

வசனம்.

அம்பலத்திலாடும் நடனத்தை வர்ணித்துச் சொல்லுவார்.

ராகம் - சங்கராபரணம்  ;  தாளம் - சாப்பு.

பல்லவி.

ஆடியபாதா-இருவர்கள்-நாடும்வினோதா. (ஆடிய)

அனுபல்லவி.

ஆடியபாதா வயனுமாலுந்தினம்
தேடியுங்காணாமற் றிரைமறைவாகத்
தித்தித் தித்தித் தித்தித்தியென் (றாடிய)

சரணங்கள்.

வீரவெண்டையஞ்சிலம்பசைந்திட மேவுஞ்சடையம் புலியசைந்திடச்
சாருந்தொண்டர்கள் மனங்குவிந்திடச் சாலோகாதி பதவியுந்
தந்தோந் தந்தோந் தந்தோந் தந்தோமென நடனம் (ஆடிய)