திருநாளைப்போவார்156நந்தனார் சரித்திரக் கீர்த்தனை

ராகம் - மாஞ்சி  ;  தாளம் - சாபு.

பல்லவி.

வருகலாமோவையா உந்தன்
அருகில்நின்று கொண்டாடவும் பாடவும்நான் (வருக)

அனுபல்லவி.

பரமகிருபாநிதி        யல்லவோ இந்தப்
பறையனுபசாரஞ்      சொல்லவோ உந்தன்
பரமா நந்தத் தாண்டவம் பார்க்கவேநா னங்கே (வருக)

சரணங்கள்.

பூமியில்புலையனாய்ப்பிறந் தேனே-நான்
    புண்ணியஞ்செய்யாமலிருந் தேனே-என்
சாமியுன்சந்நிதி வந் தேனே-பவ
    சாகரதுக்கமிழந் தேனே-கரை
கடந்தேனே சரண மடைந் தேனே-தில்லை
    வரதா பிரதாபமும் பாபமுந் தீரவே-நான் (வருகலாமோ)

_________

வசனம்.

இப்படி நந்தனார் தில்லையில் வந்து கொண்டாடிப் பின்பு பக்தி மார்க்கத்தை
யெடுத்துப் பேசுகின்றார்.

சிந்து.

இதுதானோதில்லைப்பதி-என்று-எக்கலித்தாராடிக் கொக்கலித்தார்
ஐயாவுன்சந்நிதியைக்-காண-வாசைகொண்டுவந்தே னேசமுடன்
தெருவில்பொடித்தூளை-அள்ளித்-தேகமுழுதிலுந் தாகமுடன்
தரித்தார்திருநீறாய்-நாலு-சாஸ்திரவேதங்கள் பார்த்துணரும்
பெரியோரிருக்குமிடம்.