வசனம்.
நந்தனார், தில்லைத்தலம்
இப்படியிருக்கிறதென்று சொல்லுகின்றார்.
தண்டகம்.
ராகம் - செந்தக்கடுக்கா ;
தாளம் - ஆதி.
பல்லவி.
ஆகாதாகாதையே-இங்கிருக்க லாகாதாகாதையே.
ஆகமங்களுறை வேதியர்கள்சிவ
னடியார்கள் கூட்டம் - மன
தேகமாகியெப் போதும்விளைகின்ற
யோகிமுனிக ணாட்டம் - பூ
லோகமிதுகை லாசமென்றுமிதைப்
போற்றுவார்க ளாட்டம் - அதி
வேகமாகவெங்கேயாகினும்வெளியே
போகவேணுமையேஇருப்ப
தாகா தாகாதையே-இங்கிருக்க-லாகாதாகா தையே
பாவிப்பறையனிங்கே வரலாமோ சுவாமிதரிசனந்
தரலாமோ
பாதகமலங்களைத்தொடப் போமோ
பாவமெனைப்பிரிந்துதொலை
போமோ-இருப்ப
தாகாதாகாதையே-இங்கிருக்க-லாகாதாகா தையே
வேள்விசெய்யும்புகை மேலுல கெழும்பிப் போகுது
புண்ணியர் புரியுந்தவமுடன்
அரகரசிவனென்று ஆடிப்பாடிக்கொண்டு
பரிவுடனுனை ப்ரதட்சணம்வருமிடம்-ஆகாதாகா தையே
மணியாடுது வெகுசனங்கூடுது வீதி வலமாகுதுதிருப்
பதம்பாடுது
உள்ளே நடமாடுது பணி விடைபோகுது
பர வசமாகுது
மெத்தப் பயமாகுது இங்கே-ஆகாதாகாதையே
தீண்டாதே இங்கே வேண்டாதே
சும்மா
யிறையாதே இங்கே தரியாதே என்னைப்
பாராதே படியேறாதே உள்ளே போகாதே வரலாகாதே
யென்பார்-ஆகாதாகாதையே.
|